பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விமானம் புணேவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் பொறியியல் குழுவால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன்காரணமாக மீண்டும் தில்லி திரும்பவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
தில்லி செல்லும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.