திருப்பதி கோவில் வளாகத்தில் இன்று(ஜூன் 21) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட நிலையில், சுமார் 24 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில், லட்டு தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை போராடி அணைத்ததாகவும், சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின் விரிவான தகவல் வெளியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.