இந்தியா

கொச்சி கோயிலில் திடீரென மிரண்ட யானை: பாகன் காயம்

கொச்சி கோயிலில் யானை திடீரென மிரண்டதில் அதன் பாகன் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கொச்சி கோயிலில் யானை திடீரென மிரண்டதில் அதன் பாகன் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கேரள மாநிலம், கொச்சியில் திரிபுனித்துரா பூர்ணத்ரயீசா கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 'அதாழ சீவேலி' சடங்கிற்காக யானை வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தது.

அப்போது சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் யானை, திடீரென ஆக்ரோஷமாக மாறியது.

இந்த சம்பவத்தில் அதன் பாகன் காயமடைந்தார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆக்ரோஷமடைந்த யானை, கோயில் அலுவலகத்தை நோக்கிச் சென்று அங்கேயே நின்றது.

இந்தச் சம்பவம் காரணமாக பக்தர்கள் பீதியடைந்தனர். இருப்பினும் கோயில் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து கூட்டத்தைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

கொச்சியில் உள்ள கோயில்களில் திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் யானைகள், அவ்வப்போது மதம் பிடித்து அட்டகாசம் செய்வது மற்றும் பாகன்களை காயப்படுத்துவது போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

An elephant ran amok at the Tripunithura Poornathrayeesa Temple here on Sunday, injuring its mahout, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டம்: தொடக்கி வைத்த முதல்வர்!

நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! உச்சகட்ட பதற்றத்தில் தில்லி!

தில்லியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்!

விஜய்யை கண்டு தில்லி பயப்படுகிறது! செங்கோட்டையன்

SCROLL FOR NEXT