மே.வங்கம்: இடைத்தேர்தலில் பாஜக தோல்வி! ஆளும் திரிணமூல் காங். பெருவெற்றி!
இடதுசாரி ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் மூன்றாமிடம் மட்டுமே பெற முடிந்தது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக, இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்த அவரது தந்தை நசீருதின் அஹமது கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் இன்று(ஜூன் 23) அறிவிக்கப்பட்டன. அதில், நசீருதின் அஹமது கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட அவரது மகள் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement
ஆலிஃபா அஹமது 50,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உதின் ஷேக்கால் இந்த இடைத்தேர்தலில் மூன்றாமிடம் மட்டுமே பெற முடிந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.