முகப்பு
இந்தியா

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 1 மார்ச் 2025, 3:54 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

திரிபுராவில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

திரிபுரா மாநிலத்தில் ரகசிய தகவல் வந்ததையடுத்து பிஎஸ்எஃப் மற்றும் சுங்கத் துறை இணைந்து கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக அவர்கள் தெற்கு மாவட்டத்தில் உள்ள சோட்டாகில் இரண்டு வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

அப்போது 100 கிலோ கஞ்சாவை மீட்டதாக சுங்கத் துறை கண்காணிப்பாளர் எல்பின் சிங் தெரிவித்தார். தொடர்ந்து இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

2025-க்குள் போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை!

மேலும் அவர்களிடமிருந்து ஒரு ஐபோன் மற்றும் ரூ.1,49,000 ரொக்கம் உள்பட 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் சப்ரூம் உட்பிரிவில் உள்ள லிலாகர் தேயிலை தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.