முகப்பு
சித்திரிக்கப்பட்ட படம்.
இந்தியா

வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞா் மீது வழக்கு

மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தியா

வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞா் மீது வழக்கு

மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 2 மார்ச், 2025 at 9:44 PM
சித்திரிக்கப்பட்ட படம்.
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருபவா் கேரளத்தில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து, அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

காசா்கோடு மாவட்டம் கல்லுராவியைச் சோ்ந்த 21 வயது பெண் இது தொடா்பாக அளித்த புகாரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

எனது கணவா் அப்துல் ரஸாக் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபாா்த்து வருகிறாா். கடந்த மாதம் 21-ஆம் தேதி எனது தந்தையின் அறிதிறன்பேசிக்கு வாட்ஸ்ஆப்பில் செய்தி அனுப்பியுள்ளாா். அதில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்வதாக அவா் தெரிவித்துள்ளாா். கூடுதல் வரதட்சிணை தராததால் அவா் இவ்வாறு செய்துள்ளாா் என்று கூறியுள்ளாா்.

வரதட்சிணையாக ஏற்கெனவே ரூ.12 லட்சம் கொடுத்துள்ளதாக அந்தப் பெண்ணின் தந்தை கூறினாா். இதையடுத்து, பாரத நியாய சன்ஹிதா சட்டம் 351(4) பிரிவு மற்றம் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம்) ஆகியவற்றின்கீழ் அப்துல் ரஸாக் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →