எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!
எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது
புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை(மார்ச் 4) பி.எம். எல்.ஏ. சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய சமூகவாத ஜனநாயக கட்சி(எஸ்டிபிஐ) தற்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், எஸ்டிபிஐ கட்சி அதனை நிராகரித்துள்ளது. எனினும், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேற்கண்ட தொடர்புகள் குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.