எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது!
எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது
Updated On : 4 மார்ச், 2025 at 10:53 AM
புது தில்லி : எஸ்டிபிஐ தேசியத் தலைவர் எம். கே. ஃபைஸி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஃபைஸியை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை(மார்ச் 4) பி.எம். எல்.ஏ. சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
Updated On : 4 மார்ச், 2025 at 11:18 AM
கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய சமூகவாத ஜனநாயக கட்சி(எஸ்டிபிஐ) தற்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், எஸ்டிபிஐ கட்சி அதனை நிராகரித்துள்ளது. எனினும், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேற்கண்ட தொடர்புகள் குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Advertisement