ஹோலி பண்டிகை காரணமாக ஹிந்தி தேர்வெழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுமென்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஹோலி பண்டிக்கையைப் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஹிந்தி தேர்வில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சில இடங்களில், மார்ச் 15 ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடைபெறும் அல்லது மார்ச் 15 வரை கொண்டாட்டங்கள் நீடிக்கும் என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார்.
இதையும் படிக்க: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு!
திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றாலும், சில மாணவர்களால் தேர்வு எழுத முடியாத பட்சத்தில் மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான வாரியத்தின் கொள்கையின்படி, சிறப்புத் தேர்வு நடத்தப்படும் மாணவர்களுடன் சேர்ந்து அத்தகைய மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.