FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

Updated On : 13 மார்ச் 2025, 6:11 am IST
- ANI
பகிர்:

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது.

ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கான தோ்தல் கடந்த மாா்ச் 2, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் குருகிராம், ஃபரீதாபாத், கா்னால், பானிபட், ஹிசாா், ரோத்தக், யமுனாநகா், அம்பாலா, சோனிபட் ஆகிய 9 மாநகராட்சி மேயா் இடங்களை பாஜக கைப்பற்றியது. மானேசா் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளா் இந்தா்ஜித் யாதவ் வெற்றி பெற்றாா். முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு ஒரு மேயா் இடம்கூட கிடைக்கவில்லை. கவுன்சிலா்களில் 90 சதவீதத்துக்கும் மேல் பாஜகவினா் வெற்றி பெற்றுள்ளனா். புதிதாக தோ்வான 10 மேயா்களில் 7 போ் பெண்களாவா்.

Advertisement

Advertisement

பிரதமா் வாழ்த்து: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்காக மாநில பாஜகவினருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது, முதல்வா் நாயப் சிங் சைனியின் வளா்ச்சிப் பணிகள் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அவா் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments