என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே.. காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்குமா?
என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே, விபத்தில் மரணமடைபவர் குடும்பத்துக்கு காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்கும்.
ஒருவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் கார்டுக்கே ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பது சிலருக்குத் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.
தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் அட்டை பயன்படுத்திக் கொண்டிருந்த நபர், எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைய நேர்ந்தால், அவரது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீடு பெற முடியும் என்கிறது ஆர்பிஐ விதிமுறை.
ஆனால், இந்த காப்பீட்டுத் தொகையான வங்கிக்கு வங்கியும், ஏடிஎம் அட்டையின் வகையின் அடிப்படையிலும் மாறுபடுகிறது.
Advertisement
Advertisement
அனைத்து வங்கிகளுமே, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்குகிறது. அது வெறும் பணம் எடுக்க மட்டுமே பயன்படுகிறது என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், வங்கி ஏடிஎம் வைத்திருப்பவர் விபத்தில் மரணமடைய நேர்ந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமடைந்தாலோ காப்பீட்டுத் தொகை பெற முடியும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், கோடக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்தக் காப்பீட்டு வசதியை வழங்கி வருகிறது.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கார்டின் வகையைப் பொருத்து விமான விபத்து அல்லது விமான விபத்து அல்லாத விபத்துகளில் பலியாகும் நபர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
ஆனால், விபத்து நேரிட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒருவேளை விமான விபத்தில் பலியாகியிருந்தால், அந்த விமான டிக்கெட், அவரது ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்தி எடுத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்கின்றன.
எஸ்பிஐ பிளாட்டினம் கடன் அட்டை வைத்திருப்பவர்கள், விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்தாலும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.