முகப்பு
இந்தியா

இந்தியா - சீனா போட்டி, மோதலாக மாறக் கூடாது: பிரதமர் மோடி

சீனா உடனான கூட்டு ஒத்துழைப்பு வலுவாக உள்ளதாக நம்புகிறேன் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Updated On : 16 மார்ச் 2025, 10:00 pm IST
பிரதமர் நரேந்திர மோடி - ANI
பகிர்:

இந்தியா - சீனா இடையிலான போட்டி மோதலாக மாறக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் இயற்கையானவை என்றும், ஆனால், உலகின் நிலைத்தன்மைக்காக வலுவான கூட்டு ஒத்துழைப்பில் இரு நாடுகளும் ஆர்வமுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது இந்தியா - சீனா உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

Advertisement

Advertisement

''சமீபத்தில் (கடந்த ஆண்டு அக்டோபர்) சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலையை நீட்டிக்கச் செய்வதற்கான பார்வைகளை இருவரும்ப கிர்ந்துகொண்டோம். 2020-க்கு முன்பு எல்லைப் பகுதிகளில் நிலைத்திருந்த அமைதியை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இருதரப்பிலும் ஈடுபட்டுள்ளோம்.

மெதுவாக, அதே நேரத்தில் நிச்சயமாக எல்லைகளில் இயல்பு நிலை திரும்பும். எல்லைகளில் முன்பு இருந்த அதே உற்சாகம், ஆற்றல் மீண்டும் திரும்பும். ஆனால், இதற்கு நேரம் எடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

இந்த நவீன உலகில் சீனாவின் பங்கு முக்கியமானது. வரலாற்றுப் பதிவுகளை எடுத்துப் பார்த்தால் சீனாவும் இந்தியாவும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பாடங்களைக் கற்றுள்ளனர்.

இருதரப்பும் உலக மேம்பாட்டிற்காக அளப்பறிய பங்காற்றியுள்ளன. பொருளாதார வரலாற்றை திரும்பிப் பார்த்தால், இந்தியாவும் சீனாவும் மட்டுமே உலகின் மொத்த ஜிடிபியில் 50% பங்காற்றியுள்ள பதிவுகளைக் காணலாம்.

இந்தியாவின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு எத்தகையது என்பதை இதிலிருந்து அறியலாம். சீனா உடனான கூட்டு ஒத்துழைப்பு கலாசார ரீதியிலும் வலுவாக உள்ளதாக நான் நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments