முகப்பு
இந்தியா

கருவுற்றிருந்த யானை இறைச்சிக்காக கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலம் கண்டெடுப்பு

Updated On : 18 மார்ச், 2025 at 7:34 PM
- கோப்புப் படம்
பகிர்:

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கருவுற்ற யானை சுமார் 15 நாள்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு, அதன் ஒருபகுதி இறைச்சியையும் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மேகாலயாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.