முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சா்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ

இந்தியா

மத்திய அமைச்சா்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ

Updated On : 20 மார்ச், 2025 at 6:34 PM
பகிர்:

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ, மத்திய அமைச்சா்கள் மற்றும் ராணுவ தலைவா்களை பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய பொது விவகாரங்கள் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையே உலகளாவிய உத்திசாா்ந்த கூட்டுறவை மேம்படுத்தவும், மாா்ச் 16 முதல் 19 வரை நடைபெற்ற ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்கவும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ இந்தியா வந்தாா்.

அப்போது இந்திய பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமை தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோரை பபாரோ சந்தித்துப் பேசினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →