கோப்புப் படம் ENS
இந்தியா

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு! உச்ச நீதிமன்றம் கெடு!

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடு வழங்குமாறு உத்தரவு

DIN

கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்தல் குற்றம் என்று அரசு தெரிவித்தாலும், ஆங்காங்கே சிலர் ஈடுபடுத்தப்படுவது இன்றும் நிகழ்கிறது.

இந்த நிலையில் தில்லி நீர் வாரியம், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது, உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, 4 நகரங்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் போதுமானதாகவோ திருப்தியளிப்பதாகவோ இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அடுத்த முறை தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரமும் முறையாக இல்லையென்றால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொள்ளும் என்று எச்சரித்தது.

மேலும், கடந்த 3 மாதங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு தொகையை 4 வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT