அந்தோணி அல்பானீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம்
இந்தியா

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆஸி. பிரதமருக்கு அழைப்பு!

ஆஸ்திரேலியாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

DIN

ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஐந்து ஆண்டுகளில், விரிவான கூட்டு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பு வளர்ச்சியடைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துவதில் ஆர்வமிக்க இந்திய வம்சாவளியினர் ஆற்றிய பங்களிப்பை பகிர்ந்துகொண்டனர்.

பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் சுதந்திரமான, வெளிப்படையான விதிகள் சார்ந்து பணியாற்றுவதற்கும் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஆண்டு உச்சி மாநாடு மற்றும் குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அல்பானீஸுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT