முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் மூவர் பலி!

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பலியாகினர்.

Updated On : 7 மே, 2025 at 8:33 AM
இந்தியத் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள்..
பகிர்:

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

Advertisement

இதையும் படிக்க: பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மூன்று அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.