மீட்கப்பட்ட பொருள்.  
இந்தியா

ஜெய்சால்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சால்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜெய்சால்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கோட்வாலி காவல் நிலையப் பகுதியின் கீழ் கிஷன்காட்டின் முன் அமைந்துள்ள ஜோகிஸ் காலனியில் உள்ள நர்சரிக்கு அருகே இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கோட்வாலி காவல் அதிகாரி பிரேம் தன், அது வெடிகுண்டு போன்ற பொருளாகத் தெரிகிறது எனக் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ய கிஷன்காட் விரைந்துள்ளனர். அது உயிர்ப்புடன் உள்ளதா அல்லது செயல் இழந்ததா என்பது தெரியவில்லை.

பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து!

உள்ளூர்வாசியான அர்ஜுன் நாத், அந்தப் பொருளைக் கண்டு உடனடியாக கிஷன்காட் சர்பஞ்ச் பிரதிநிதி கல்யாண் ராமுக்குத் தகவல் கொடுத்தார். அவர் பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை மற்றும் இந்திய விமானப்படையின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் பொருள் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஜெய்சால்மரில் பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோனின் பாகங்களுடன் ஒத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

கல்வராயன் மலையில் பயங்கரம்: நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT