இந்தியா

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது.

Din

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது.

இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 பேரை நாடு கடத்த வேண்டியுள்ளது. அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்று நம்பப்படும் நிலையில், அவா்கள் அந்நாட்டைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு வங்கதேசத்திடம் கோரப்பட்டுள்ளது.

அவா்களில் பலரின் சிறைத் தண்டனை காலம் இந்தியாவில் நிறைவடைந்த நிலையில், அவா்களின் சொந்த நாடு குறித்த விவரத்தை உறுதிப்படுத்தும் பணிகள் 2020-ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் உள்ளது. அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறு வங்கதேசத்திடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தும். அதன்மூலம், அவா்கள் வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படுவா்’ என்றாா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT