இந்தியா

10 முதல்வர்களை உருவாக்கிய நான், இப்போது உழைப்பது முதல்வர் பதவிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் பேச்சு.

DIN

10 முதல்வர்களை உருவாக்கிய நான் முதல்வராக வேண்டும் என்று விரும்பவில்லை என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் என பல கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார்.

இதையடுத்து பிகார் வளர்ச்சிக்காக கடந்த 2022ல் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில் நேற்று(புதன்கிழமை) பிகார் மாநிலம் சரண் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

“நான் முதல்வராக வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால் உங்களுக்கு என்னைப் பற்றி தெரியவில்லை. என் உழைப்பால் 10 முதல்வர்களை உருவாக்கியிருக்கிறேன். இன்று நான் கடுமையாக உழைப்பது நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். ஹரியாணா, பஞ்சாபில் இருந்து வேலைக்காக மக்கள் பிகாருக்கு எப்போது வருகிறார்களோ அப்போதுதான் என் கனவு நிறைவேறும். அப்போதுதான் பிகார் வளர்ச்சியடைந்ததாக நான் கருதுவேன்" என்று கூறியுள்ளார்.

பிகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT