கோப்புப்படம் 
இந்தியா

'பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்' - சுப்ரமணியன் சுவாமி

ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து.

DIN

பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும் என்று ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பிகார் பாட்னாவில் ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நமது நாகரிக வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்று எனத் தெரிவித்தார்.

"பஹல்காமில் தாக்குதல் நடத்தியதன் மூலமாக பாகிஸ்தான் முதலில் மோதலை உண்டாக்கியது. இது நமது நாகரிக வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவங்களில் ஒன்று. அதனால் பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி வெளிநாடுகளுக்குச் சென்று எம்.பி.க்கள் விளக்கமளிப்பதால் எந்த தாக்கமும் இருக்காது. அவர்கள் தங்கள் பொழுதைக் கழிக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT