கோப்புப்படம்.  
இந்தியா

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார்.

DIN

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார்.

உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தின்போது அறை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த துணை ஆய்வாளர் வீரேந்திர குமார் மிஸ்ரா(58) கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார்.

கூடுதல் காவல் ஆணையர் அலோக் பிரியதர்ஷி இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

காலையில் போலீஸார் அலுவலகத்திற்கு வரும் வரை கட்டடம் இடிந்து விழுந்த விவரம் தெரிவரவில்லை. உடனே அவர்கள் மிஸ்ராவின் உடலை இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஐபோன் மட்டுமல்ல; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!

ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

எட்டாவா மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT