இந்தியா

உச்சநீதிமன்றத்தின் 3 புதிய நீதிபதிகள் யார்? குடியரசுத் தலைவர் அறிவிப்பு

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோர் நியமனம்

DIN

உச்சநீதிமன்றத்தின் 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பணி ஓய்வால், உச்சநீதிமன்றத்தில் மூன்று காலியிடங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின்படி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளான என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் நீதிமன்றம் செயல்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக, தவெக புறக்கணிப்பு; அதிமுக, பாஜக பங்கேற்பு!

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி: திருமாவளவன்

அழகுப் பதுமை... அஹானா கிருஷ்ணா!

கடல் அலையின் நடுவே... ஆயிஷா!

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT