கோப்புப்படம் 
இந்தியா

ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்: டிஆா்டிஓ

இந்திய ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Din

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆா்டிஓ) தலைவா் வி.காமத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சிஐஐ மாநாட்டின்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகான இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்கள் போா்க்காலத்தின்போது எவ்வாறு செயல்படும் என்று சோதனையை மேற்கொள்ள முடிந்தது. இதனால் வருங்காலங்களில் இந்திய ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

5-ஆம் தலைமுறை போா் விமானமான மேம்படுத்தப்பட்ட நடுத்தர போா் விமானத்தின் (ஏஎம்சிஏ) வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு அண்மையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கினாா். 2034-இல் இதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு 2035-இல் உற்பத்தி தொடங்கப்படும். இதன் முதல் மாதிரி விமானம் 2029-க்குள் தயாராகிவிடும்’ என்றாா்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT