ராஜஸ்தானில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி X
இந்தியா

ராஜஸ்தானில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி; 12 பேர் பலி!

ராஜஸ்தானில் லாரி மோதி விபத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானில் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது லாரி மோதியதில் 12 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஹர்மதா பகுதியில் இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை மீறிச் சென்றதில் கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.

தகவலறிந்த தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக ஜெய்ப்பூர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி சுமார் 300 மீட்டர் கட்டுப்பாட்டை இழந்து சென்றதாகவும் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rajasthan accident: 12 killed as truck ploughs into several vehicles in Jaipur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT