ஊடுருவல்காரர்களின் கூடாரமாக சீமாஞ்சல்: ஆர்ஜேடி கூட்டணி மீது அமித் ஷா குற்றச்சாட்டு!
பூர்னியாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமித் ஷா உரை..
பிகாரின் சீமாஞ்சல் பகுதியை ஊடுருவல்காரர்களின் கூடாரமாக மாற்றுவதில் காங்கிரஸ் தலைவர் ராகுலும், ஆர்ஜேடியின் தேஜஸ்வியும் தீவிரம் காட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பிகாரில் முதல்கட்ட தேர்தல் நவ. 6ல் நடந்து முடிந்துள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11-ல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடைய பூர்னியாவில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா,
Advertisement
Advertisement
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகாரில் 160க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைக்கும் என்று வலியுறுத்தினார்.
மாநிலத்தின் பாதி பகுதி ஏற்கெனவே காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வழிவிட்டுவிட்டதாக நடந்துமுடிந்த முதல் கட்ட தேர்தலை அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் பிகாரின் சீமாஞ்சல் பகுதியை ஊடுருவல்காரர்களின் கூடாரமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளனர்.
சட்டவிரோதமாகக் குடியேறிய ஒவ்வொருவரையும் நாங்கள் அடையாளம் காண்போம். அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி அவர்களை நாடு கடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Union Home Minister Amit Shah on Saturday alleged that Congress leader Rahul Gandhi and RJD's Tejashwi Yadav were "hell-bent" on making Bihar's Seemanchal region a "den" of infiltrators,
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.