தில்லி கார் வெடிப்பு: விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு!
தில்லி கார் வெடிப்பு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பு...
தில்லி கார் வெடிப்பு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று(திங்கள்கிழமை) இரவு 7 மணி அளவில் வெள்ளை நிற ஹூண்டாய் கார், முதலில் மெதுவாக சென்ற நிலையில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிஆர்பிஎப், மத்திய புலனாய்வு அமைப்புகளும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்திருந்தன.
Advertisement
Advertisement
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. தில்லி காவல்துறை, உளவுத் துறை என அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இன்று காலையும் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிற்பகலில் இந்த கூட்டத்திற்குப் பின்னரே வழக்கின் விசாரணையை முழுமையாக என்ஐஏ-விடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படியே உடனடியாக என்ஐஏ அதிகாரிகள் தில்லியில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Delhi Red Fort blast: Case handed over to anti-terrorism agency NIA
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: யார் இந்த உமர் முகமது?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.