ஸ்பைஸ்ஜெட் கோப்புப்படம்
இந்தியா

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

தில்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறங்கியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் இருந்து லேவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் தில்லி சர்வதேச விமானத்தில் இருந்து லே விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணியளவில் புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்த நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் இரண்டாவது என்ஜினில் பிரச்னை இருப்பதை விமானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ’முழு அவசர தரையிறக்க’த்துக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரப்பட்டது. உடனடியாக தில்லி விமான நிலையத்தில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர்.

விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் என்ஜின் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SpiceJet Flight Engine failure in Delhi! Emergency landing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT