தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்துப்படுவார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லி செங்கோட்டை அருகே நேற்று (நவ.10) மாலை சாலையில் நின்றுகொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயங்களுடன் தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் விசாரணைத் தொடங்கியிருக்கும் நிலையில், முதல்கட்டமாக முகமது உமர் என்ற மருத்துவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து காரை வெடிக்கச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தில்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
“தில்லியில் நேற்று நடந்த துயர சம்பவத்தில் பலியான அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையும் தைரியத்தையும் அளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி புலனாய்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. விரைவில் விசாரணையில் கிடைத்த தகவல்கள் பகிரப்படும்.
இந்த கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், அவர்கள் எந்த சூழலிலும் தப்ப முடியாது என்பதை தேசத்துக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.