முகப்பு
இந்தியா

உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு கடுங்காவல் தண்டனை..

Updated On : 13 நவம்பர் 2025, 12:26 pm IST
சிறைத் தண்டனை
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து பிரதாப்கர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் தேவேந்திர திரிபாதி கூறுகையில்,

2023 ஜூன் 23 அன்றிரவு, ஏழு வயது சிறுமி சக சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குடிபோதையிலிருந்த மௌரியா சிறுமியை வீட்டிற்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்டவரின் தந்தை புகார் அளித்த நிலையில் முதியவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் மௌரியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார்.

விசாரணையின்போது வழக்குரைஞரின் வாதங்களைக் கேட்ட பிறகு, சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்ததாக வழக்குரைஞர் கூறினார்.

அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவம் மற்றும் மன அதிர்ச்சிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அவர் கூறினார்.

summary

A court in UP's Pratapgarh has convicted a 60-year-old man for raping a seven-year-old girl and sentenced him to 20 years' rigorous imprisonment, a case lawyer said on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.