முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் அதானி குழுமம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு

ஆந்திர மாநிலத்தில் சிமெண்ட், தரவுகள் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

Updated On : 14 நவம்பர் 2025, 11:31 pm IST
அதானி குழுமம் - கோப்புப் படம்
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் சிமெண்ட், தரவுகள் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த முதலீட்டின் மூலம் தென் இந்தியாவில் தனது வணிகத்தை பன்மடங்கு மேம்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் பங்கேற்று அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல மேலாண்மை இயக்குநா் கரண் அதானி பேசியதாவது: ஆந்திரத்தில் துறைமுகம், லாஜிஸ்டிக்ஸ், சிமெண்ட், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்கெனவே ரூ.40,000 கோடி முதலீடு செய்துள்ளோம்.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக தற்போது சிமெண்ட், தரவுகள் மையம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments