முகப்பு
இந்தியா

பிகார் தேர்தல்: 200 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி முன்னிலை!

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்...

Updated On : 14 நவம்பர், 2025 at 7:03 AM
தேஜஸ்வி யாதவ்
பகிர்:

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டீரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(நவ. 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணி 111 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிகார் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தலைவரும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தனது குடும்பத்தின் கோட்டையான வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டார்.

4 ஆம் சுற்று முடிவில்

ரகோபூர் தொகுதியில் கடந்த 2 சுற்றுகளாக தேஜஸ்வி பின்னடைவைச் சந்தித்தார்.

4 ஆம் சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரைவிட தேஜஸ்வி யாதவ் 3,000 வாக்குகள் பின்தங்கி இருந்தார். 5 ஆம் சுற்று முடிவில் 100 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருந்த அவர் 6 ஆம் சுற்று முடிவில் 200 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜகவின் சதீஷ் குமார் 23,531 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் தேஜஸ்வி யாதவ் 23,312 வாக்குகள் பெற்றுள்ளார்.

6 ஆம் சுற்று முடிவில்
summary

Bihar Election Results 2025: RJD Tejashwi Yadav faced trailing in Raghopur

முழு கட்டுரையைப் படிக்க →