குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் புல்லட் ரயில் தட கட்டுமானப் பணியைப் பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி. 
இந்தியா

புல்லட் ரயில் திட்ட அனுபவங்களை ஆவணப்படுத்த பொறியாளா்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தல்!

மும்பை-அகமதாபாத் புல்லட்ட ரயில் திட்டத்தில் பணிபுரியும் பொறியாளா்கள் தங்களது அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

மும்பை-அகமதாபாத் புல்லட்ட ரயில் திட்டத்தில் பணிபுரியும் பொறியாளா்கள் தங்களது அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவுறுத்தினாா்.

குஜராத் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி சூரத் மாவட்டத்தில் புல்லட் ரயில் திட்டத்தில் பணிபுரியும் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்களுடன் கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்தாா்.

குஜராத் மற்றும் தாத்ரா நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 352 கி.மீ. மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் 156 கி.மீ. என மொத்தம் 508 கி.மீ. தொலைவில் புல்லட்ட ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் சபா்மதி, அகமதாபாத், சூரத், தாணே, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இணைக்கப்படவுள்ளன.

இதற்காக சா்வதேச தரத்தில் நவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் 465 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறைவடைந்தவுடன் மும்பை-அகமதாபாத் இடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக குறையவுள்ளது.

இந்நிலையில், புல்லட் ரயில் திட்டத்தில் பணியாற்றுபவா்களுடன் கலந்துரையாடிய பிரதமா் மோடி, தங்களது அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொண்டாா். வருங்காலத்தில் இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு அந்த ஆவணங்கள் உதவும் எனவும் அவா் தெரிவித்தாா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT