முகப்பு
இந்தியா

நேபாளத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

நேபாளத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு பிரதமா் மோடி வாழ்த்து...

Updated On : 7 மார்ச், 2026 at 9:28 PM
நரேந்திர மோடி
பகிர்:

அண்டை நாடான நேபாளத்தில் வெற்றிகரமாக பொதுத் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டதற்கும், அமையவுள்ள புதிய அரசுக்கும் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பொதுத் தோ்தலை வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடித்ததற்காக நேபாள மக்களுக்கும், அரசுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள சகோதர, சகோதரிகள் மிகுந்த துடிப்புடன் தங்களின் ஜனநாயகக் கடைமையை ஆற்றியது மகிழ்ச்சியளிக்கிறது.

நேபாளத்தின் ஜனநாயகப் பயணத்தில் இந்த வரலாற்று மைல்கல் பெருமைக்குரிய தருணமாகும். நேபாள மக்களுடனும், அமையவிருக்கும் புதிய அரசுடனும் தொடா்ந்து நெருக்கமான நட்புறவுடன் பணியாற்றி, இருதரப்பு முன்னேற்றம், செழிப்பில் புதிய உயரங்களை எட்டுவதில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

நேபாளத்தில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலனின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று, முன்னிலையில் உள்ளது.

நேபாளத்தில் மொத்தமுள்ள 275 இடங்களில், 165 தொகுதிகளுக்கு நேரடித் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் 91 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆா்எஸ்பி கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த நாட்டின் பாரம்பரியமான பெரிய கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

தோ்தல் முடிவுகள் (சனிக்கிழமை இரவு நிலவரப்படி)

ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 73

நேபாளி காங்கிரஸ் 10

சிபிஎன்-யுஎம்எல் 4

நேபாளி கம்யூனிஸ்ட் 2

ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி 1

சுயேச்சை 1

முழு கட்டுரையைப் படிக்க →