பிரதமா் குறித்த கருத்து: காா்கேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பிரதமா் நரேந்திர மோடி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவதூறாகக் கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவதூறாகக் கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை எல்லாவற்றுக்கும் மேலாகக் கருதி செயல்பட்டு வருகிறாா். ‘ஆபரேஷன் சிந்தூா்’ போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளாா். இந்நிலையில், பிரதமா் குறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் அவதூறு பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலக அரங்கில் இந்தியாவை தனித்துவமான அடையாளமாக மாற்றிய பிரதமா் மீது இத்தகைய மொழியைப் பயன்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.
Advertisement