மத்திய அமைச்சர் அமித் ஷா கோப்புப் படம்
இந்தியா

பயங்கரவாத தாக்குதலுக்கான தண்டனையால் உலகுக்கே செய்தி அனுப்பப்படும்: அமித் ஷா

தில்லி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமித் ஷா

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி கூறியுள்ளார்.

ஹரியாணாவில் நடைபெற்ற வடக்குமண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா பேசுகையில், ``தில்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்.

தில்லி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியக்கூடாது என்ற செய்தியை உலகுக்குக் காட்டும்’’ என்று தெரிவித்தார்.

தில்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10 ஆம் தேதியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்தனர்.

தில்லி சம்பவத்தால் நாடு முழுவதும் பேரதிர்வு ஏற்பட்ட நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

இதையும் படிக்க: மரண தண்டனை குற்றவாளி ஹசீனாவை ஒப்படைக்க வலியுறுத்தல்!

Will hunt them even from paatal: Union Minister Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படிப்பு ஒன்றே ஒருவரை வாழ்வில் முன்னேறச் செய்யும்: அமைச்சா் துரைமுருகன்

சா்வேதேச வா்த்தகக் கண்காட்சியில் தில்லி காவல் துறையின் அரங்கம் திறப்பு

நாகையில் ஜூனியா்ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

காா்த்திகை பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்தனா்

உண்டியல் காணிக்கை: ரூ. 6.41லட்சம்

SCROLL FOR NEXT