கோப்புப்படம்.  ENS
இந்தியா

கேரளத்தில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து

ஆலப்புழாவில் விருந்தினர்களை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆலப்புழாவில் விருந்தினர்களை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள புன்னமடாவில் விருந்தினர்களை ஏற்றிச் சென்ற படகு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. படகு கரைக்கு அருகில் இருந்ததால், விருந்தினர்கள் விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விருந்தினர்களுக்கு உணவு தயாரிக்கும் போது மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், சமைக்கும் போது ஏற்பட்ட கவனக்குறைவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சமையலறையில் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த ருதுராஜ்! கேப்டன் கே.எல்.ராகுல்

தீ விபத்தில் படகு வீட்டின் சமையலறை மற்றும் படுக்கையறை எரிந்து நாசமானது. சாலை வழியாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. மேலும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படகும் பயன்படுத்தப்பட்டது.

தீயை அணைக்க சுமார் ஒன்றரை மணி நேரமானது என்று தெரிவித்தார்.

A houseboat carrying guests caught fire at Punnamada on Sunday afternoon, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

Hollywoodஐக் கலக்கிய புதுவை Director! M Night Shyamalan! | Dinamani Talkies | Sixth Sense | Split

இது ஞாயிறு மனநிலை.. அங்கனா ராய்!

தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT