தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்
வடமேற்கு தில்லில் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் போலீஸார் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
வடமேற்கு தில்லில் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் போலீஸார் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
வடமேற்கு தில்லியின் மஜ்லிஸ் பூங்காவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 6 போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
அந்த நேரத்தில் கட்டடத்திலோ அல்லது அதன் அருகிலோ இருந்த பல உள்ளூர்வாசிகளும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஆரம்பத்தில் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் காயங்கள் தீவிரமாக இருந்ததால், பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
Advertisement
மேலும் அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தீயணைப்புத் துறையினரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஸ்டில்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது பார்க்கிங் பகுதியில் எல்பிஜி எரிவாயு கசிவு ஏற்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் கூறினர்.