மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி  கோப்புப் படம்
இந்தியா

எஸ்ஐஆர்! சர்வதேச எல்லைப் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? மத்திய அரசுக்கு மமதா பானர்ஜி கேள்வி

சர்வதேச எல்லைப் பாதுகாப்பை மீறி மேற்கு வங்கத்தில் எப்படி சட்டவிரோதமாக நுழைய முடியும் என்று மமதா பானர்ஜி கேள்வி

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச எல்லைப் பாதுகாப்பை மீறி மேற்கு வங்கத்தில் எப்படி சட்டவிரோதமாக நுழைய முடியும் என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து தாகூர் நகரில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ``என்னுடைய கணிப்பு என்னவென்றால், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும். மேற்கு வங்கத்தில் அவர்கள் வெற்றி பெற்றால், குஜராத்தை இழப்பார்கள்.

எஸ்ஐஆர் ஏன் இவ்வளவு அவசரமாக நடத்தப்படுகிறது? தேர்தலுக்கு முன்பு ஏன் எஸ்ஐஆர் நடத்தப்படுகிறது?

இவ்வளவு காலமாக எல்லை மாவட்டங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்றால், சர்வதேச எல்லையை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? விமான நிலையங்கள், சுங்கத் துறை என அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: அயோத்தியில் ஏற்றப்பட்டது வெறும் கொடி அல்ல; நாகரிகத்தின் மறுமலர்ச்சி! மோடி

Who is responsible for guarding the international border? asked Mamata Banarjee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 டி-20 உலகக் கோப்பை: பிப். 7 -ல் தொடக்கம் - அட்டவணை வெளியீடு

34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி: முதல்வர் ஸ்டாலின்

டெட் தேர்வு தேர்ச்சி விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்! விஜய்யுடன் நாளை சந்திப்பு!

நாட்டில் அமைதி முக்கியம்; ஆனால், பாதுகாப்பில் சமரசமில்லை - பிரதமர் மோடி

SCROLL FOR NEXT