முகப்பு
இந்தியா

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு

Updated On : 2 அக்டோபர் 2025, 3:00 am IST
பிரதிப் படம் - ENS
பகிர்:

தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 மே மாதத்தில் தொடங்கப்பட்டு, 19 கோடிக்கும் மேற்பட்ட வலைத்தள வருகைகளையும், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் பயன்பாட்டு பதிவிறக்கங்களையும் (App) சஞ்சார் - சாத்தி தளம் பதிவு செய்துள்ளது.

சஞ்சார் - சாத்தியின் மூலம் மீட்கப்படும் கைப்பேசிகளின் மீட்பு விகிதம், மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. 2025 ஜனவரியில் 28,115-ஆக இருந்த கைப்பேசிகள் மீட்பு, ஆகஸ்ட்டில் 45,243-ஆக உயர்ந்தது. 8 மாதங்களில் 61 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

6 லட்சம் கைப்பேசிகள் மீட்பின் மூலம், லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுக்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் கூறுகிறது.

இதையும் படிக்க: பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

summary

Over 6 lakh lost and stolen mobile handsets recovered with help of DoT's Sanchar-Saathi app

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments