திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!
சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்பு
தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 மே மாதத்தில் தொடங்கப்பட்டு, 19 கோடிக்கும் மேற்பட்ட வலைத்தள வருகைகளையும், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் பயன்பாட்டு பதிவிறக்கங்களையும் (App) சஞ்சார் - சாத்தி தளம் பதிவு செய்துள்ளது.
சஞ்சார் - சாத்தியின் மூலம் மீட்கப்படும் கைப்பேசிகளின் மீட்பு விகிதம், மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. 2025 ஜனவரியில் 28,115-ஆக இருந்த கைப்பேசிகள் மீட்பு, ஆகஸ்ட்டில் 45,243-ஆக உயர்ந்தது. 8 மாதங்களில் 61 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
6 லட்சம் கைப்பேசிகள் மீட்பின் மூலம், லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுக்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் கூறுகிறது.
இதையும் படிக்க: பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?
Over 6 lakh lost and stolen mobile handsets recovered with help of DoT's Sanchar-Saathi app
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.