முகப்பு
இந்தியா

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

உத்தரப் பிரதேசத்தில் ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 1 அக்டோபர், 2025 at 7:37 PM
கோப்புப்படம்.
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பட்டா காவ்னில் வசிக்கும் பூல் சிங்கின் மகன் ஹர்ஷ்(18).

இவர், ராமர், பிரதமர் மோடி குறித்து ஆட்சேபகரமான கருத்துகளுடன் விடியோவை எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்ததும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விடியோவை உருவாக்கியவர் ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டார்.

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

summary

An 18-year-old man was arrested from a village here on Wednesday for making a video containing objectionable comments on Lord Ram and Prime Minister Narendra Modi and circulating it on social media, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.