காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!
காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தியது பற்றி...
தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்கரியும் உடனிருந்தார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, தில்லியில் உள்ள விஜய் காட் சென்ற மோடி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.
Prime Minister Narendra Modi paid tributes at the Mahatma Gandhi memorial in Delhi on Thursday.
இதையும் படிக்க : சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.