பி.ஆர். கவாய் உடன் பேசிய பிரதமர் மோடி! தாக்குதலுக்கு கண்டனம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தொடர்புகொண்டு பேசினேன்.
உச்சநீதிமன்ற வளாகத்தில் இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அனைத்து இந்தியர்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. நமது சமூகத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்ட நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | இதுபோன்ற சம்பவம் என்னை ஒருபோதும் பாதிக்காது: பி.ஆர். கவாய்!