முகப்பு
இந்தியா

பிகார் தேர்தல் பணிகளில் 8.5 லட்சம் அதிகாரிகள்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

8.5 லட்சம் அதிகாரிகள் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து..

Updated On : 9 அக்டோபர், 2025 at 11:36 AM
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் 8.5 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பகிர்:

பிகாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில், சுமார் 8.5 லட்சம் தேர்தல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் வரும் நவம்பர் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. சுமார் 243 தொகுதிகளில், 2 கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலானது, வரும் நவம்பர் 6 ஆம் தேதியன்று தொடங்குகின்றது.

பிகாரில், வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதற்கட்டமாக 121 சட்டமன்றத் தொகுதிகளிலும், நவம்பர் 11 ஆம் தேதி 122 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று; தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பணிகளில் சுமார் 8.5 லட்சம் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கேரள சட்டப்பேரவையில் அமளி! 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

summary

It has been reported that around 8.5 lakh election officials will be deployed for the upcoming assembly elections in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.