கோப்புப்படம்.
இந்தியா

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

தலைநகர் தில்லியில் முந்திரி திருட்டு வழக்கில் 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

தலைநகர் தில்லியில் முந்திரி திருட்டு வழக்கில் 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு தில்லியின் நியூ கோண்ட்லி பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து 440 கிலோ முந்திரி திருடுபோனதாக கடையின் உரிமையாளர் போலீஸில் புகார் அளித்தார். கடையின் கிடங்கில் இருந்து சுமார் 600 கிலோ எடையுள்ள 60 வாளி முந்திரி திருடுபோனது தெரிய வந்தது.

அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சம்பவம் நடந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ​​கடையின் ஊழியரான சாகர் கான்தான் இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

அவர் சச்சினுடன் சேர்ந்து இந்த திருட்டை அரங்கேற்றியுள்ளார்.

இதையடுத்து தப்பிக்க முயன்ற சாகர் கானை ஹோட்டல் அருகே போலீஸார் கைது செய்தனர். மேலும் கரோலி கிராமத்தில் சச்சின் கைது செய்யப்பட்டார்.

கானிடமிருந்து 39 வாளிகள் (390 கிலோ) முந்திரியையும், மண்டாவலியில் உள்ள உள்ளூர் கடை உரிமையாளரான நிதின் குப்தாவிடமிருந்து ஐந்து வாளிகள் (50 கிலோ) முந்திரியையும் போலீஸார் மீட்டனர்.

மீதமுள்ள சரக்குகளை அவர் விற்றதாக ஒப்புக்கொண்டார். இவ்வழக்கில் இதுவரை டெம்போ உரிமையாளர் சாகர் கான் (22) முகேஷ் சாஹு (24), திருட்டுக்கு உதவிய பள்ளி டாக்ஸி ஓட்டுநர் சச்சின் (22) மற்றும் திருடப்பட்ட பொருட்களைப் பெற்ற உள்ளூர் கடை உரிமையாளர் நிதின் குப்தா (35) ஆகியோர் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

The Delhi Police have arrested four men in connection with a burglary case, recovering 440 kilograms of cashews stolen from a warehouse in the New Kondli area of east Delhi, an official said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT