மறைந்த ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் 
இந்தியா

9 நாள்களுக்குப் பின் ஐபிஎஸ் அதிகாரியின் உடல் பிரேதப் பரிசோதனை!

ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை சண்டீகரில் தொடங்கியது

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் உடல் ஒன்பது நாள்கள் கழித்து இன்று சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரேதப் பரிசோதனை தொடங்கியது.

ஹரியாணா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் அக்டோபர் 7 ஆம் தேதி சண்டீகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது அருகில் அவர் பயன்படுத்திய துப்பாக்கியும், எட்டு பக்க தற்கொலைக் குறிப்பும், உயில் ஒன்றும் மீட்கப்பட்டன.

பிரேதப் பரிசோதனை குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, மூத்த தடயவியல் நிபுணர்கள், ஹிஸ்டாலஜி நிபுணர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவின் மேற்பார்வையின் கீழ் பிரேதப் பரிசோதனை தொடங்கியது. இந்த வழக்கை விசாரிக்கும் சண்டீகர் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகச் செயல்முறை முழுவதும் பின்பற்றப்பட்டது. விசாரணைகளின் நெறிமுறையின்படி முழு பிரேதப் பரிசோதனை செயல்முறையும் விடியோ பதிவு செய்யப்படுகிறது.

குடும்ப ஒப்புதல் இல்லாததால் பிரேதப் பரிசோதனை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியவும், சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தடயவியல் சான்றுகளை உறுதிப்படுத்தவும் உதவும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மறைந்த பூரண் குமார், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜர்னியா உள்பட எட்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சாதி அடிப்படையிலான பாகுபாடு, மனரீதியான துன்புறுத்தல், அவமானம் மற்றும் அட்டூழியங்கள் போன்றவை எதிர்கொண்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டினார். மேலும் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், சண்டீகர் காவல்துறை இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. மூத்த காவல்துறை அதிகாரிகள் தலைமையிலான இந்தக் குழு, ரோஹ்தக்கிற்கு வருகை தந்து அதிகாரியின் சேவை, தனிப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்து முக்கியமான ஆவணங்களைப் பெற ஹரியாணா அரசுடன் ஒருங்கிணைந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

பிரேதப் பரிசோதனை மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் தடயவியல் பரிசோதனையின் முடிவுகளில் ஐபிஎஸ் அதிகாரியின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதன் உண்மையை தீர்மானிக்க இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The postmortem of late IPS officer Y Puran Kumar began on Wednesday at the Postgraduate Institute of Medical Education and Research (PGIMER), Chandigarh, nine days after his death.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் திருப்பம்: கணவரால் மயக்க மருந்து செலுத்திக் கொல்லப்பட்டாரா?

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

புதுவைக் கடலில் டால்பினுடன்... சஞ்சனா திவாரி!

எனதருமை ரத்தங்களே... அரசன் புரோமா பார்த்த சிம்பு உற்சாகம்!

SCROLL FOR NEXT