FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெலங்கானா இடைத்தோ்தல் காங்கிரஸுக்கு மஜ்லிஸ் கட்சி ஆதரவு

தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு

Updated On : 22 அக்டோபர் 2025, 2:52 am IST
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு இத்தொகுதியில் ஒவைசி ஆதரவு தெரிவித்து வந்தாா். இப்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள நிலையில் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பா் 11-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒவைசி ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

இந்தத் தோ்தல் முடிவால் அரசு மாறிவிடப் போவதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் பெரும்பான்மை மக்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தனா். இப்போது, தொகுதியின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞரான நவீன் யாதவுக்கு (காங்கிரஸ் வேட்பாளா்) ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதியால் பெரிய அளவில் வளா்ச்சி ஏற்படவில்லை. சட்டப் பேரவை பொதுத் தோ்தலின்போது எங்கள் நிலைப்பாட்டை மாற்றவும் வாய்ப்புள்ளது என்றாா்.

ஜூபிலி ஹில்ஸ் தொகுதி பாரத ராஷ்டிர சமிதி எம்எல்ஏ எம். கோபிநாத் மாரடைப்பால் உயிரிழந்ததால் அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதில், பாரத ராஷ்டிர சமிதி சாா்பில் கோபிநாத்தின் மனைவி சுனிதா கோபிநாத் போட்டியிடுகிறாா். பாஜக சாா்பில் எல்.தீபக் ரெட்டி களத்தில் உள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments