ரயில்கள் தாமதமாகப் புறப்பாடு! ANI
இந்தியா

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாக இயக்கம்!

இணையதளச் செய்திப் பிரிவு

‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • அதன்படி, ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்(22825) ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 12.10 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

  • ஹௌரா - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12841) ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 3.10 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும்.

  • சந்திரகாசி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(22807) சந்திரகாசி ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) மாலை 5.55 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 5.55 மணிக்குப் புறப்படும்.

  • தான்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ்(13351) தான்பாத் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 11.35 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 6.35 மணிக்குப் புறப்படும்.

  • எஸ்எம்விடி பெங்களூரு - டானாபூர் எக்ஸ்பிரஸ்(03252) எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) இரவு 11.50 மணிக்குப் பதிலாக 6 மணி 40 நிமிஷங்கள் தாமதமாக நாளை(அக். 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும்.

Owing to the cyclone impact, East Coast Railway has made changes and rescheduling in the pattern of train services.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றது தமிழா்களுக்குப் பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: 2 சிறுவா்கள் கைது

வத்தலக்குண்டு அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சுவால்பேட்டையில் விரைவில் காரியமேடை அமைப்பு

SCROLL FOR NEXT