ராஜஸ்தான் ஜெய்ப்பூரின் மனோகர்பூர் பகுதியில் தனியார் பேருந்து தொங்கும் மின்கம்பியை உரசியதில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தனியார் பேருந்து மனோகர்பூர் பகுதியில் உள்ள கச்சா சாலையில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மின்கம்பியை உரசிய நிலையில், பேருந்து தீப்பிடித்து எரிந்தது, பின்னர் அது அணைக்கப்பட்டதாக ஜெய்ப்பூர் காவல் கண்காணிப்பாளர் ராஷி டோக்ரா துடி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு முதற்கட்டமாக இருவர் பலியான நிலையில், ஐந்து பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.