பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு-காஷ்மீரில் 2 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்!
2 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார்.
பயங்கரவாத செயல்களில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டார்.
அதன்படி, கல்வித் துறையில் ஆசியர்களாகப் பணியாற்றும் குலாம் உசேன் மற்றும் மஜித் இக்பால் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரியாசி மாவட்டத்தின் மஹோர் தாலுகாவில் உள்ள கல்வா முலாஸிலும், அதே நேரத்தில் மற்றொருவர் தார் ரஜௌரி மாவட்டத்தின் கியோரா பகுதியில் உள்ள வார்டு எண்.1ல் வசிப்பவர் ஆவார்.
Advertisement
Advertisement
இவர்களின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் பணிநீக்கம் செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் 12-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் எந்த விசாரணையும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha on Thursday ordered the dismissal of two government employees over their alleged terror links, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.