ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது!
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டது பற்றி...
ஜம்மு -காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர், எல்லை பாதுகாப்புப் படையினரால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் சர்வதேச எல்லையில் ஆர்.எஸ். புரா செக்டார் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர், வேலியைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊருடுவ முயன்றுள்ளார்.
இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து அவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பாகிஸ்தான் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் அவர் பாகிஸ்தானில் சர்கோதா நகரைச் சேர்ந்த சிராஜ் கான் என்று தெரியவந்துள்ளது. அவர் இந்தியாவுக்குள் வருவதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Pakistani Intruder Apprehended Along International Border In Jammu
இதையும் படிக்க | ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?